Monday, March 30, 2009

அவன் கடவுள்!!

பாஸ்கர்.
அவன் எனக்கு 2 வருடங்களுக்கு முன் பழக்கம்.நல்லவன்,என்னை பொருத்த வரை.
அவன் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் போலவே இருப்பான்.
ஆஜானுபாகுவான தேகம்.பாசமான கண்கள். சில நேரம் அவனை பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும்.
எங்கள் கல்லூரி நாட்களில் அவன் தான் மாணவிகளின் கனவு நாயகன்.
எங்களிடம் ஒரே ஒற்றுமை.. அவனை போலவே தான் என் சிந்தனையும் இருக்கும்.
இதுதான் எங்களை இணைப்பிரியா நண்பர்களாக்கியது.


அது 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி. மாலை நான்கு மணி. ஒரு ஃபுட் பால் என் தலையில் வந்து அடித்தது.
வலி சுரீரென்றது. வலியுடன் திரும்பி பார்த்தேன். அவன். கோபமே உருவாக நின்றிருந்தான். எனக்கு புரியவில்லை.
இவன் எதுக்கு என் மீது கோவப்பட வேண்டும். நான் அப்படி எந்த விதத்தில் இவனை புண்படுத்தினேன். யோசித்தேன்.
அப்போது வகுப்பு நண்பர்கள் அவனை நோக்கி பாய்ந்தனர். நான் தடுத்து நிறுத்தினேன். அவனை பார்த்தேன். சிரித்தான்.
அட..சிரிக்கிறானே!.. சரி..மரியாதைக்காக நானும் சிரித்தேன்.அடுத்த கணம் கன்னம் சுரீரென்றது. அறைந்தான்.
இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அப்படியே அவன் சட்டையை பிடித்து கீழே சாய்த்தேன். கால்களை
சரியாக இடறிவிட்டேன். கீழே விழுந்தான். தலை தரையில் பலமாகவே மோதியது. சத்தம் கேட்டதும் எனக்கு உறைத்தது.
ரத்தம் பார்க்க போகிறான் ரங்கன். அப்போது அவனை தூக்க முயன்றேன். பயனில்லை. மயங்கிவிட்டான். நண்பர்களை அழைத்தேன்.
உள்ளே கொண்டு வந்தோம். வெளியே யாரும் பார்த்ததாக தெரியவில்லை. உள்ளே சென்றேன். தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.
வேண்டாம் என்றேன்.

அனைவரும் என்னை பார்த்தனர். ஏன். அவனுக்கு தலையில் அடிப்பட்டு இருக்கிறது. முதலில் மருந்து வைத்து கட்டுவோம்.
1 நிமிடம் கூட ஆகாது என்றேன். சரி. இப்போது அவன் மயக்கத்தில் இருந்து எழுந்தான். அவனருகில் அமர்ந்திருந்தேன்.
நேராக அமர்ந்தான்.
நன்றி என்றான்.
வெல்கம் என்றேன். நீ ஓய்வு எடு. நான் வேறு மருந்துகள் வாங்கி வருகிறேன் என்றேன்.
வேண்டாம் என்றான்.
சரி வேறு என்ன வேண்டும் என்றேன்.

உன் நட்பு என்றான் தெளிவாக. நான் ஆச்சரியப்பட்டேன். அதற்கு முன் எனக்கு ஒரு விடை வேண்டும் என்றேன்.
ம்ம் சொல்லு.
எதற்கு என்னை தாக்கினாய்?.
அது நானாக செய்யவில்லை, தூண்டப்பட்டேன்.நீ நன்றாக கவிதை
எழுதுவியாமே .உன்னை ஒரு காதல் கவிதை எழுதி தர சொல்லி கேட்டதற்கு முடியாது என்று சொல்லி என் நண்பர்களை
மிகவும் திட்டினாயாமே. அதனால் வந்த கோபம் தான் .

ம்ம்.. என்னை அவர்கள் திட்டியது பற்றி அவர்கள் சொல்லி இருக்க
மாட்டார்கள். உன் தாயை திட்டினால் நீ கோபப்பட மாட்டாயா?. கொன்றுவிடுவேன்.
அதை நான் செய்துருக்க வேண்டும்.
அப்போது அங்கே ஆசிரியர் வந்துவிட்டார். தப்பித்தனர். பாவம் உன்னை தாக்கி என் கோவத்தை வடித்துகொண்டேன். மன்னித்துவிடு.

அதெல்லாம் ஒன்றுமில்லை.
இனி நான் நண்பர்கள். சரிதானே. ம்ம்..
அடுத்த சில நாட்கள். அமைதியாய் கழிந்தது. கல்லூரி நாளில் என்
கவிதை ஒன்றை அவன் மேடையில் படித்தான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். நானும்தான். மெல்ல மெல்ல அவனும் நானும்
நண்பர்களாய் வளர்ந்தோம். அவனின் சிந்தனை அப்படியே என்னுடையதை ஒத்து இருந்தது. படிப்பில் அவனுக்கு ஆர்வம் அதிகம். அவனின் ஆர்வம் என்னையும் பற்றிகொண்டது. மெல்ல மெல்ல
நாங்கள் நட்பின் ஆழத்தை உணர்ந்தோம். அது வெகு சீக்கிரம் முடியப்போவது அறியாமல்.

மரங்களும் நட்பும் ஒன்று. அவை ஆயுளுக்கும் வளர்பவை. தினமும் புதுப்பித்துகொள்பவை.


அன்று மார்ச் 29. மாலை ஆறு மணி. சரி நான் கிளம்புகிறேன் ரங்கா.
ம்ம்.. சரி.
ரங்கா நாளை நான் வருவேனா என்று தெரியவில்லை.
வீட்டில் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கிறது.

கவலைப்படாதே. சரியாகிவிடும்.

எனக்கு அப்படி தோன்றவில்லை. பயமாக இருக்கிறது.
என் கைகளை பிடித்துகொண்டான். கண்கள் பனித்திருந்தன.

ஹேய். அழாதே. நாங்களெல்லோரும் இருக்கிறோம்.
பயப்படாமல் போய் வா. இரவு மெஸேஜ் பண்ணு.

பொறுமையா போய்டு வா.

சரி நான் கிளம்புகிறேன். சைக்கிளில் கிளம்பினான்.

இரவு அவன் அனுப்பியது ஒரே ஒரு மெஸேஜ்.
"நீயாச்சும் நல்லா தூங்குடா ரங்கா."

காலை 8.30க்குதான் அதை பார்த்தென்.
அலைப்பேசியை கீழே வைக்க போனேன்.

நண்பன் ரமேஷ் அழைத்தான்.
"மச்சி.. பாஸ்கர்....."

"என்னடா..அவனுக்கு என்ன..தெளிவா சொல்லு"

"சைக்கிள்ல வரும்போது மயங்கி விழுந்து.. இறந்துட்டான்டா.."

"டேய்.. என்னடா சொல்ற..எங்கடா இருக்கே.. "

"பழைய பஸ் ஸ்டாண்ட் டா"

அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து அவனை பார்த்தேன்.
பிணமாய்.

இதற்கு மேல் எழுத முடியவில்லை.

எனக்கு அவன் கடவுள்தான்.

நட்பின் கடவுள்.

பாட்டு பாஸ்கி அவன் தான்.

இன்று அவனின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி.


பாட்டு பாஸ்கி : மச்சி ஏன் இப்படி..?
சரி.. தெம்பா உனக்கு பிடிச்ச நியுயார்க் நகரம் பாட்டு கேளு.
இனிமே இப்படி ஒப்பாரி வெச்ச..மவனே பேத்துடுவேன்.

Sunday, March 29, 2009

என் தேவதையின் சோகம் :(

எப்போதும் போல இல்லை இன்று. மனம் சோகத்தின் நிழலோடு காணப்படுகிறது. கவிதைகள் சோகத்தை கரைக்கும் என்ற நம்பிக்கையோடு கவிஞானாகிறேன்.




அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது

கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.

"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு
என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு
என்ன ஆனது.. உன் கண்களுக்கு
என்னவோ இழந்தது போல்
என்னவோ தொலைத்தது போல்
என்னவோ கிடைக்காதது போல்
ஏன் இந்த வாட்டம்..
நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"

தேவதை சொன்னது
" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"

கடவுள் சொன்னார்
" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"

தேவதை சொன்னது

"இறைவா..!!
நான் அன்பை நீட்டுகிறேன்
அதை பெற்றுக் கொண்டு
கன்னத்தில் அரைகிறது உலகம்;



நான் பூக்களை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
தீயால் சுடுகிறது உலகம்;


நான் புன்னகையை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;


நான் அரவணைப்பை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;


நான் ஆதரவை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;


நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."

கடவுள் புன்னகைத்தார்..
தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.

"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."

தேவதை சொன்னது
"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"

கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.

"ஒரு நிமிடம்.. உனக்கு தான் கொடுப்பது பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தவிக்கிறாய் ? "

தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.

கடவுள் சிரித்தார்.
" அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.
இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.

கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.
எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"

என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."

தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :
"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "

தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.



பாட்டு பாஸ்கி :
ஆமா இது கதையா கவிதையா?

என்னவோ .. உனக்கு இப்போ மனஸ ரிப்பேர் பண்ணனும் .
க(வி)தைக்கேத்த பாட்டு என்கிட்ட இருக்கு.. கீழ பாரு.


"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லே.
நான் தான்டா என் மனசுக்கு ராஜா
தூவுங்கடா என் வழியில ரோஜா...

நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்..
கேக்குற வரத்தே கேட்டுக்கடா..

இந்த பாட்ட முழுசா கேளு..
தெம்பாகிடுவ.. என்னங்க.. இந்த பாஸ்கி சொல்றது சரிதானே...!!

Friday, March 27, 2009

விளக்கை அணை .. உலகம் வாழட்டும்


முதல் முதலாக புவி வெப்பமடைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாடுகளில் உள்ள மக்கள் பலர் ஒன்று சேர்ந்து நாளை சனி இரவு 8 : 30 மணி முதல் 9:30 மணி வரை தங்கள் வீடுகளில் விளக்கை அணைத்து தங்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.



இது போன்ற முயற்சி எர்த்ஹவர் என்கிற இயக்கம் மூலமாக 2007ல் துவங்கப்பட்டது.
முதல் முதலாக 2007ல் ஆஸ்திரேலிய மக்கள் 2.2 மில்லியன் பேர் தங்களுடைய வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்து தங்களுடைய ஓட்டினை எர்த் ஹவருக்கு பதிவு செய்தனர்.
அடுத்த ஆண்டே 2008ல் 50 மில்லியன் பேர் தங்களுடைய ஓட்டினை இவ்வாறு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்கத்தை இந்த வருடம் இந்தியாவும் இந்த ஆண்டு ஆதரிக்க முன்வந்துள்ளது.
நமது நாட்டில் இந்த இயக்கத்தினை தலைமையேற்க பாலிவுட் நடிகர் அமீர்கான் முன்வந்துள்ளார்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்லாமல் உலக வெப்பமாதலில் நமது நாடும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே வரும் சனிக்கிழமை இரவு உங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்து எர்த் ஹவருக்கு உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
உங்களின் ஓட்டுகள் அனைத்தும் பதியப்படுவது மட்டுமின்றி அது
கோபென்ஹாகனில் நடக்கவிருக்கும் புவி வெப்பமடைதல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்படத்தக்கது.

இன்று வரை சரியாக 80 நாடுகளில் உள்ள 825 நகர மக்கள் இதற்கு ஆதரவு தெரிவுத்துள்ளனர்.
நமது நாட்டில் இன்ஃபோசிஸ், விப்ரோ, HSBC , HP ஆகிய நிறுவனங்கள் இதற்கு ஆதவளித்துள்ளன.

நீங்களும் உங்கள் மேலான ஆதரவினை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

மேலும் தகவலுக்கு இங்கே சுட்டவும்.

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.

Sunday, March 22, 2009

அவசர உலகில் ஒருவன் !

நேரம் 6 : 30
டிக் டிக்..
டிக் டிக்..
டமால்...!!


அலாரம் கீழே விழுந்து நொறுங்கியது.
"அய்யய்யொ.. போச்சு,ஸ்ஸ்ஸ்ஸ்.. "
உடைந்த பாகங்களை பொறுக்கிக் கொண்டு வாசலுக்கு நடந்தேன்.
தூக்க கலக்கம்.. நடக்கும்போதே லுங்கி அவிழ.
"அய்"
லுங்கியை பிடித்தேன். மீண்டும் அலாரம் சிதறியது.
மீண்டும் சில பாகங்கள் உடைந்தது.

ஒரு முறை கொன்றாலும் கொலையாளிதான்,
பலமுறை கொன்றாலும் கொலையாளிதான்.
ஏன் வேறு உதாரணமே கிடைக்கவில்லையா உனக்கு?
என மனதை திட்டுவிட்டு வாசலுக்கு
சடலத்துடன்..ச்சி..கருமம்..
உடைந்த பாகங்களோடு சென்றேன்.

அலாரத்துக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு..
பால் பாக்கெட்டை தூக்கி கொண்டு நடந்தேன்.

குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன்.

நேரம் 6:45
குளிக்கப் போகிறேன்.
"அடடா!"
துணிகளை எடுக்கவேயில்லை மாடியிலிருந்து.
எடுக்க மேலே போனேன். வயலெட் ஜட்டி அப்புறம் வெள்ளை பனியன்.
மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தேன்.

அதிர்ந்துபோனேன்.

"அவ்ளோ அழகான ஃபிகரை என்றைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்..
ஓ..ஃபிகர் என்று சொல்லிவிட்டேனா.. சாரி.. மங்கையை ..பெண்ணை .. போதுமா?!"
அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள்.

ஆ.. இது பூமிதானே.. இல்ல வேற எதாவது சொர்க்கமா?

"போதும்டா போய் பொழப்ப பாருடா! பரதேஸி..! பரதேஸி..!"
வடிவேலு ஸ்டைலில் மனசாட்சி விரட்டியது.

"எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.."

உன்ன போட்டுதள்ளிட்டுதான் அடுத்த வேல..
ஒரு பொண்ண பாக்க விடுறியா? தொல்ல உன்னோட..

கண்டுகாதீங்க.. நானும் என் மனசாட்சியும் இப்படிதான் அடிக்கடி பேசிக்கொள்(ல்)வோம்.

நேரம் 7 : 20
"அய்யோ.. ச்சி..சீ.. என்னங்க.. பேசிட்டே பாத்ரூமுக்குள்ள வந்துட்டீங்க.."
நான் ஆண்தான் அதுக்காக வெக்கபடாம இருக்க முடியுமா.. ?வெளிய இருங்க.. வரேன்.ஹிஹி.."

"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. செம குளுரு.. "
"மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.."

போட்டாச்சு போட்டாச்சு.. எப்படி மாப்ள மாதிரி இருக்கனா ன்னு கேட்டேன் கண்ணாடிக்கிட்ட..
"உனக்கென்னடா.. அம்சமான ஆளுடா நீ.. கலக்குடா"அந்த பக்கத்தவன் சொன்னான்.. மகிழ்ந்தேன்.

டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.

ஓக்கே.. ஜம்ஜம்னு ரெடி ஆகியாச்சு.
போற வழில சாப்பிட்டுக்கலாம்.

பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.

கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!
கேலண்டரில் ராசி பாக்கலாமே என திரும்பி பார்த்தேன்.

மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!

அடச்சே.. இன்னிக்கு சண்டேவா?
தனியா மூணு நாள் இருந்ததுக்கே இப்படி ஆகிட்டனே.. அய்யோ..அய்யோ..!!

Friday, March 20, 2009

வேகம் .... விவேகமா?



ஏன் இந்த அவுதி...?!மெதுவாதான் போறது.
அப்படி என்ன குடியா முழுகி போய்டும்...?
ஏந்தான் இப்படி பறக்குதுங்களோ...
அப்பன் காசு எப்படி பறக்குது பாரு...

இதெல்லாம் சாலைகளில் வேகமாக..நான் சொல்வது 30 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில்
45 முதல் 60 கி.மீ வரை செல்பவர்களைப் பற்றி.

நானும் தினமும் 60 நிமிடங்கள் வரை சாலைகளில் செலவிடுகிறேன்.
எனக்கு தெரிந்து அதிகபட்ச இளைஞர்கள் 100சிசிக்கும் மேலான திறன்கொண்ட வண்டிகள்தான் வைத்திருக்கிறார்கள்
சாலைகளில் அதிகப்பட்ச வேகத்தில் செல்வதை இவர்கள் பெறுமையாக நினைக்கிறார்கள்.
பெவிலியனில் ஒரு பெண் இருந்துவிட்டால் போதும்.. தலைக்கால் புரிய மாட்டேங்கிறது நம்ம பசங்களுக்கு..
இப்படி பல குறைப்பாடுகள் கொண்டவராகவே இருக்கிறார்கள் நம் இளைஞர்கள்.

வேகமாய் போவது ஏன் ? என்று எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டதில்
கீழே உள்ள காரணங்கள் முக்கியமானவை
1. அப்போதான் நம்மை பலரும் கவனிப்பார்கள் (முக்கியமாக இளம்பெண்கள்/ஆண்கள்)
2. அது ஒரு தனி த்ரில்.
3. ஆமை மாதிரி போறதுக்கா இவ்ளோ பணம் போட்டு 125 சிசி வண்டி வாங்கினது..?
4. அதுதான் பாதுகாப்பு.. சீக்கிரம் போய்சேரலாம்.. ?!( குறிப்பிட்ட இடத்திற்கு )

இது போல ஒவ்வொருக்கும் ஒன்று முதல் பல காரணங்கள்..

இவை எல்லாமே தவிர்க்கக்கூடிய காரணங்கள்தான்.
இந்த காரணங்கள் அத்தனையுமே ஓரளவு தவறான கண்ணோட்டம் உடையவை .
எப்படி?

1.//அப்போதான் நம்மை பலரும் கவனிப்பார்கள் (முக்கியமாக இளம்பெண்கள்/ஆண்கள்)//
அப்படி ஒரு எண்ணமே தேவை இல்லாதது.. பிறரை "இம்ப்ரஸ்"(தமிழில் என்ன?) செய்வதற்கு வேறு பல இடங்கள் உண்டு,
அதை விட்டு இப்படி செய்வது தவறான கண்ணோட்டம்.

2.//அது ஒரு தனி த்ரில்.//
இது முழுக்க முழுக்க சுயநல வாதம்.. உங்கள் சுயநலத்திற்காக சாலைகளை பயன்படுத்துவது தவறான கண்ணோட்டம்.

3.//ஆமை மாதிரி போறதுக்கா இவ்ளோ பணம் போட்டு 125 சிசி வண்டி வாங்கினது..?//
இதையே நான் திருப்பி கேக்கறேன்.. "அடிபட்டு சாகவோ அல்லது கைகால்களை இழக்கவா அந்த 125சிசி-யை வாங்குனீங்க?

4.//அதுதான் பாதுகாப்பு..குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரம் போய்சேரலாம்.//

அப்படியா.. அப்போ நிதானமா போறவங்க எல்லாம் இ.வா.வா? போய்சேரலாம்னு சொல்றீங்களே எங்க எமன்கிட்டயா?
பாதுக்காப்பு என்பது நீங்க போற "ஹைஸ்பீடில்" இல்லை.. நல்ல தெளிவான சீரான வேகத்தில்தான் இருக்கு.

மொத்தத்தில் இவைகளை களைந்தும் நாம் சாலைகளில் சிறப்பாக செல்லமுடியும் என்பது தான் உண்மை.

சாலை விதிகளை மீறாமல்.. மிதமான வேகத்தில் செல்வதுதான்.. உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும்
பாதுக்காப்பு.. என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மறக்காமல் தலைக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவைப் பொருத்து இதை தொடர்பதிவாக வெளியிடலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

Wednesday, March 18, 2009

3D ஓவியங்கள் !!



















இது ஆங்கிலத்துல பேவ்மண்ட் ஆர்ட் என்று பெயர்..
மிகவும் துல்லியமாக வரைந்தாலெயொழிய இப்படி 3டி உருவங்களை கொண்டுவர முடியாது..
மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக்குங்க.

என்னங்க.. பாத்து மலைச்சு போய்டீங்களா..?
ஒக்கே.. கூல் டவுன்...
மின்னலக்கா ஸ்டைலில் சொல்றேன்
பிடிச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க..
பிடிக்கலையா கமெண்ட் போடுங்க..

Tuesday, March 17, 2009

கோபம் என்னும் எதிரி




நம்ம ஸ்வீட்பாய் விஜய்க்கு இவ்ளோ கோவம் வருமா.. ?!!!
அடி ஆத்தே...
அதான் இவரு படம் எல்லாமே ஆக்ஷன் படமா இருக்கு போல..
நல்லாதான்யா கோவப்படுறாரு...
பாத்தாச்சா..
பாத்ததுக்கு நாலு கமெண்ட் நச்சுனு போட்டுட்டு போங்க..

Thursday, March 12, 2009

மகிழ்ச்சியே மருத்துவம்

எனக்கு எந்த கவலையுமே இல்லயே..
அதுதான் எனக்கு கவலையா இருக்கு...!!!
இப்படி பல பேரு நம்ம ஊருல புலம்பிட்டு இருக்காங்க.

அதுவும் பெண்களின் பக்கத்தில் இது கொஞ்சம் அதிகமா இருக்கு.

எங்க அத்தை ஒருத்தங்க அப்படித்தான்..
சாப்பாட்டில் ஒரு முடி விழுந்திட்டாக்கூட
பதறி.. பயந்துபோய் தனக்கு எதுவோ வியாதி இருக்குனு நினைச்சுக்குவாங்க..
அவ்ளோ சென்சிட்டிவ்..

சில பேர் லேசா உடம்பு சுடுதுன்னு யாராச்சும் அல்லது தெர்மாமீட்டர்
சொன்னாக்கூட..போச்சு..
கண்ணு செவந்திருக்கா பாரு..
நாக்கு மஞ்சளா இருக்கா பாருன்னு பத்ரகாளி மாதிரி வாயத் திரப்பாங்க..

அதிகபட்சம் வியாதிகள் நமக்கு வருவதும் போவதுமாய் தான் இருக்கிறது
அதை நாம் அறியாமலே உடல் பார்த்துக்கொள்கிறது.

அப்படி மீறிப்போய் வந்தாலும் அதுக்கு தேவையான மருத்துவம் பார்த்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கலாம்.அப்படி தொடர்ந்து வேலையில் இருப்பதால்
உடலை நாம் அதன்போக்கில் நோயுடன் சண்டைப்போட வழிசெய்கிறோம்.
அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. சீக்கிரமே நோய் தீர்க்கப்படுகிறது.
அதைவிட்டு நோயை நினைத்து புலம்புவதால் அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குகிறோம்.

பல மனோதத்துவ நிபுணர்கள் சொல்வது இதுதான்:
"மனதினை பொருத்தே மருந்துகள் வேலை செய்கின்றன.
ஒருவர் மருந்தை எடுத்துக்கொண்டிருந்தாலும் நோயினைப் பற்றிய நினைவுகளுடனே இருந்தால்
நோயின் தீவரம் அதிகரிக்குமே தவிர குறைவதில்லை.
அதெ நேரம் மனத்தினை நோய் தாக்கியுள்ள நேரங்களிலும் தெளிவாகவும், மகிழ்ச்சியுடனும்
வைத்திருப்பவர்கள்... வெகு வேகமாக குணமடைகிறார்கள்.

அது மட்டும் இல்லங்க..
இன்னும் ஒரு பெரிய தவறை நாம நமக்கு தெரியாம பண்ணிடுறோம்.
அது என்னனு கீழே படியுங்கள்...



" பல வகையான நோய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் நம் ஜுன்களில் தினசரி பதியப்படுகிறது.
அப்படி பதியப்படும்போதே அது எப்படி தீர்க்கப்பட்டது என்ற தகவலும் அதில் சேரும்
அப்படி மனக்குழப்பத்துடனே தீர்க்கப்பட்ட நோய்கள் பற்றிய தகவல் சரியாக சேர்க்கப்பட முடிவதில்லை.
அதனால் உங்களுடைய சந்ததியில் அந்த நோய்க்கான பாதிப்பு தொடர வாய்ப்புகள் அதிகம். "

என்ன ஷாக் ஆகிட்டீங்களா..?
அப்படியே ஆனாலும் இனிமேலாவது "வருவது வரட்டும் .. எது வந்தாலும் என் சந்தோசத்த பறிச்சுட முடியாதுன்னு
இருங்க"
உங்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு எனக்கு வயசு இல்லை..
எல்லாம் ஒரு வேண்டுகோள்தான்..
எடுத்துக்கறதும் தள்ளுவதும் உங்க விருப்பம்.

வாழ்க மகிழ்ச்சியுடன்,
ரங்கன். :D


பாட்டு பாஸ்கி : இந்த பதிவுக்கு சரியான பாடலை அண்ணன் ரங்காவே சொல்லிட்டார்.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்படோம் நடலையல்லோம்;
ஏமாப்போம் பிணி அறுப்போம் பணிவோமல்லோம்,-

இன்பமே ஒரு நாளும் துன்பமில்லை."

Wednesday, March 11, 2009

பேனாவை இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள் !!!



சரி.. வீடியோ பாத்தாச்சா...
இப்போ மேட்டருக்கு வருவோம்..
1. முதல் சங்கடம்
நிச்சயமாக திருப்பி தருவார் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்ப வாங்கி தரவே மாட்டார் என்ற நம்பிக்கையுடனோ தான் பேனாவை கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2. இரண்டாம் சங்கடம்
பேனாவை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் பேனாவை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.

3.மூன்றாம் சங்கடம்
‘இதோ இரண்டொரு நிமிஷத்தில் எழுதி விடுவேன். குடுங்க. எழுதிட்டு மேக்ஸிமம் ஒரே நிமிஷத்தில் குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4. நான்காம் சங்கடம்
இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.குப்பன் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.குப்பன் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த நீலக்கலர்ல எழுதுறப் பேனாவை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘பேனாவை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5. ஐந்தாம் சங்கடம்
நாம் இரவல் கொடுத்த பேனாவை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6. ஆறாம் சங்கடம்
வாங்கிய பேனாவை வைத்து ஏதாவது பூச்சிகளை குத்துவது, காது குடைவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7. ஏழாம் சங்கடம்
உண்மையாகவே அந்தப் பேனாவை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது சங்கடத்தின் கடைசி வரிகளைப் படிக்க....)

8. எட்டாம் சங்கடம்
இரவல் குடுத்த பேனா திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9. ஒன்பதாம் சங்கடம்
நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல,(அனுபவசாலி!!!) நண்பனுக்குப் பேனா கொடுத்தால் அந்தப் பேனா, அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10. பத்தாம் சங்கடம்
பேனாவை இரவல் வாங்கினால் உடனே திருப்பித்தர வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகத் திருப்பித் தருவார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11. பதினோறாம் சங்கடம்
நல்ல பேனா என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல பேனாவை இரவலாகக் கொடுப்பதால் அவர் பேனா வாங்கும் மனப்பான்மையினை தடுத்து
பல பேனா கம்பெனிகளுக்கு அவரால் வரும் லாபத்தினை இழக்க செய்கிறோம்.

(டிஸ்கி) :-
இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ (உள்குத்தோ) குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!!!

Tuesday, March 10, 2009

மரணத்தின் பாதைக்காக..!!!



எப்போதும் இருட்டில்
சுவனத்தனிமையில்
காற்றில்லா பூமியில்
கனியத்துடிக்கிறது மனம்;

பூக்கள் கருகி..
புன்னகைகள் இருண்டு
முட்களின் கூர்மையில்
சிகப்பு முத்துக்களாய்
ரத்தம் முட்களின் நுனியில்;

வெப்பம் எரிக்க
வேர்வையில் துளிகள்
கண்ணாடியாய் சிதற
சோகமாய் என் முகம்
ஒவ்வொரு துளியிலும் ;

மோனத்துவம் வந்து
மடியமர்ந்து கொண்டு
ஆலகால விஷமாய்
கொல்கிறது என் உயிரை;

பாலைவனச் சூட்டில்
மங்கும் சூரிய வெளிச்சத்தில்
கரிய முகங்கள்
கூரியப் பற்கள் காட்டி அழைக்கின்றன
மரணத்தின் பாதைக்காக..!!!

(பி.கு.) எட்டாங்கிளாஸில் எங்க டீச்சர் என்ன குரூப் டிஸ்கஷன்ல சேத்துக்கல.. அதான் இந்த கவிதை..சாரி.. கவுஜ..!!! ;)

சந்துருவும்.. புதிய பப்பியும்

சந்துரு..எங்கடா கிளம்பிட்ட..?

மா.. விமல் வீட்டுக்கு போறேன்மா..

நானும் வரட்டுமாடா?

இல்லமா.. அடுத்த தெருதானே.. நானே போயிக்குறேன்..

சரி.. பொறுமையா போ.. கால் வலிக்க போகுது...

ம்ம்ம்... சரிம்மா.. கிளம்பறேன்..டாட்டா..

டாட்டா செல்லம்..

*******************************

சந்துரு படியிறங்கி நடந்தான்..
அப்படியே அவன் தாத்தாவின் மிலிட்டரி நடை..

சற்று நேரத்தில் விமல் வீட்டை அடைந்தான்
ஆனால் வீடு பூட்டி இருந்தது.

திரும்பி வீட்டிற்கே நடந்தான்.
செல்லும் வழியில் ஒரு புதிய கடை ஒன்று வந்திருப்பதை பார்த்தான்.
அருகே சென்று பார்த்தான். அது ஒரு "பெட் ஷாப்".

********************************

சந்துரு "உள்ளே வரலாமா?"

கடை முதலாளி அவனை வரவேற்றார்.

குட்மார்னிங்.. அங்கிள்..

குட்மார்னிங்...

என்னப்பா.. உனக்கு பேர்ட்ஸ் பிடிக்குமா.. அல்லது டாக்ஸ் பிடிக்குமா?

ரெண்டும்தான் அங்கிள், இப்பொ எனக்கு டாக்ஸ் பார்க்கணும்.

சரி வா.. பாத்துடலாம்.

**************************




இங்க பாரு... எல்லாமே அழகழகான பப்பீஸ். நல்லா இருக்கா..?

ஆமாம் அங்கிள்.. அருமையா இருக்கு...
அங்கிள்.. அது என்ன அந்த பப்பி மட்டும் ஏன் நொண்டுது ?
என்ன ஆச்சு அதுக்கு?


அதுவா.. அதுக்கு இடுப்பு எலும்பு அவளோ வலுவா இல்லப்பா.. அதனாலதான் நொண்டுது.

சே.. பாவம் அங்கிள் ... அங்கிள் நான் அந்த பப்பிய வாங்கிக்கறேன்.

தம்பி.. அது எதுக்குப்பா உனக்கு..?
அதானல.. ஓடமுடியாது.. வேகமா நடக்கவே கஷ்டப்படும்..
உன் கூட அது குதிச்சு குதிச்சு விளையாட முடியாது...

இல்ல அங்கிள்.. அதுதான் வேணும்.
எவ்ளோ அங்கிள் பணம் தரணும்?

இல்லப்பா அதுக்கு பணம் ஏதும் வேண்டாம்..
சும்மாவே தரேன்.. வச்சுக்கோ..

சந்துரு கோபமாக..
அங்கிள்.. அதெப்படி.. மத்த பப்பி மாதிரி தானே இதுவும்
இதுக்கு மட்டும் ஏன் விலை இல்லை..?


இல்லப்பா... வேணாம்.. நீயே எடுத்துக்கோ..
பணம் வேண்டாம்.

நோ.. அங்கிள்.. முடியாது..
சரி அந்த பப்பிக்கு என்ன விலை..?
சந்துரு வேறொரு பப்பியை காட்டினான்.

அது.. 1500 ரூபா..ப்பா.

ம்ம்.. இருங்க..
தன் பாக்கெட்டில் இருந்து.. 20 ரூபாயை எடுத்தான்.

இந்தாங்க... இப்போதைக்கு இத வெச்சிகங்க..
மாசாமாசம்.. பணம் அனுப்பிடுறேன்...
சரியா? என்று அவரின் கண்களை பார்த்தான்

அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

சரிப்பா.. பணம் வாங்கிக்கறேன்.
ஆனால் ஒரு சந்தேகம், ஏன் அந்த பப்பி மேல அவ்ளோ விருப்பம்?

அவன் புன்னகைத்தான்.
அவனுடைய ஃபேண்டை உயர்த்திக்காட்டினான் சந்துரு.

அவனுடைய வலது கால் மிகவும் மெலிந்து,
இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த பப்பியோட வலி எனக்குதான் புரியும் அங்கிள்.. அதான் நான் கேட்டேன்..
அங்கிள் குறை இருக்கறதனால எந்த உயிரும் குறைஞ்சி போய்டாது..
வரேன் அங்கிள்.

மலைத்துபோய் நின்றார் கடைக்காரர்.

சந்துரு."பப்பீ.. உனக்கு என்ன பேரு வெக்கலாம்..?"


பாட்டு பாஸ்கி : இதுக்கு சரியா பாட்டு
குறையொன்றுமில்லை.. மறைமூர்த்தி கண்ணா.. !
குறையொன்றுமில்லை கண்ணா...!!
குறையொன்றுமில்லை கோவிந்தா...!!!

(பி.கு) என்றோ படித்த ஆங்கில கதை இது ... நன்றி

Wednesday, March 4, 2009

அனைத்து அம்மாக்களுக்கும்..

என்னை தினம் தினம் பாதிக்கிற விஷயம் இது,
சாலைவிதிகளை சரியா பின்பற்றாமல்
தினம் தினம் பலர் உயிரை விடுகின்றனர் பலர் முடமாகிறார்கள்.
இப்படி இருக்கும் காலத்தில் இன்னொரு கொடுமை நடந்துகொண்டிருக்கிறது..
அதுதான்.. குழந்தைகளுடன் சாலையில் செல்லும் தாய்மார்களின் கவனக்குறைவு.
சாலைகளின் ஓரத்தில் அம்மாக்களும்..
சாலையிலே குழந்தைகளையும் நடத்திச்செல்கிறார்கள்.


இப்படித்தான் சென்றவாரம் எங்களுடைய சிறியத் தெருவில் இப்படி சாலையில்
நடந்துகொண்டிருந்த ஒரு குழந்தை மீது ஒரு பைக்(பல்ஸர்)காரன் மோத இருந்தான்.
அவன் வண்டியில் அதிசயமாக பிரேக் வேலைச்செய்ய ..குழந்தை தப்பித்தது.
ஆனால் அந்த அம்மாவோ.. அந்த பைக்காரனுக்கு ஒரு இரண்டு நிமிடம் "அர்ச்சனை" செய்துவிட்டு
மீண்டும் அந்த குழந்தையை அதேபோல் சாலையில் நடத்திச்சென்றார்கள்..
கொடுமைங்க.. அந்த காட்சியை பார்த்து கத்தியேவிட்டேன்.. எல்லாரும் ஒருமாதிரி பார்த்தார்கள்.

ப்ளீஸ்..
தயவுசெய்து இனிமேவாச்சும் ஜாக்கிறதையா இருங்க..

Tuesday, March 3, 2009

கன்னத்தில் என்னடி காயம்...??

நம்ம சிபி...
ஞாயித்துகிழமை ஆளையே காணோம்..
திங்ககிழமை சாட்டிங்-லயும் இல்ல..மெயிலும் இல்ல..

என்னாடா இது.. தல சத்தமில்லாம இருக்கே..னு ரொம்ப பயமா போச்சு..
நம்ம மக்கள் வேற மண்ட காஞ்சிபோயி
"ரங்கா ரங்கா போன் போடு".. "ரங்கா ரங்கா போன் போடு"ன்னு ஒரே நச்சு..

சரி போட்டு தான் பாப்போம்-னு கால் பண்ணா...
"சும்மாதான் டயர்டா இருந்திச்சு.. அதான் லீவ்.. நாளைக்கு வந்துடுவேன்னு சொல்லிடு"னு சொன்னார்

இருந்தாலும் நம்ம க்ரெயின்(அதாங்க.. இங்கிலீஷ்ல மூளை-னு சொல்லுவாங்களே) வேல செய்ய ஆரம்பிச்சுது..
என்னமோ இடிக்குதேன்னு நம்ம சென்னை பிராஞ்ச் உளவுத்துறைய தூண்டிவுட்டேன்..

வந்தது ஒரு அதிர்ச்சி தகவல்...
சிபியோட கன்னத்துல பேண்டேஜ்...!!
ஆடிப்போய்ட்டான் ரங்கன்.. :(


என்னாடா இது கூத்தா இருக்கு.. ?சிபிமேல யாருக்கு என்ன கோவம்?
இந்த கவிதா அப்பப்போ சிபி கன்னக்குழி மேல கண்ணா இருந்துச்சே அதனாலயா?
ஒருவேள கண்மணி கடுப்பாகி கடிச்சுடுத்தா?
இல்ல பக்கத்து ஊட்டு நாய் எதும் பதம் பாத்துருக்குமோ?
இப்படி பல பல கேள்விகள் மண்டைக்குள்ள சுத்துது...

இதுக்கு பதில நம்ம உளவுத்துறையாலக் கூட கண்டுப்புடிக்க முடியல...
அதனால மக்கா மேட்டர உங்ககிட்ட விடரேன்...

எதனால் ஏற்பட்டது அந்த காயம் & பேண்டேஜ்-னு கண்டுபிடிங்க பாக்கலாம்..
பரிசானது கண்டுபிடித்தவரை பொருத்து வாரி வாரி "வழங்கப்படும்"...


பாட்டு பாஸ்கி : இத கேக்கும்போது
ஆ :"கன்னத்தில் என்னடி காயம் ?
பெ : "அது வண்ணக்கிளி செய்த மாயம்"னு சோகமா பாடத்தோணுது..
ஹ்ம்ம்.. சீக்கிரம் காயம் ஆர ப்ராஸ்பிரஸ்தூ...

மயிலிறகே.. மயிலிறகே..!! வருடுகிறாய் மெல்ல...

வெறும் இறகுகளை கொண்டு அற்புதமான ஓவியங்கள் செய்திருக்கிறார்கள்..